காத்திருக்கும் கட்சிகள்: கூட்டணியை முடிவு செய்ய ரஜினி தயக்கம்

Updated : டிச 21, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (21) | |
Advertisement
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கியுள்ள நிலையில், ரஜினியின் அறிவிப்பு, கூட்டணியை முடிவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி கட்சி துவக்கிய பின்னரே, மற்ற கட்சிகள், தங்கள் கூட்டணியை முடிவு செய்ய காத்திருக்கின்றன. எனவே, புத்தாண்டு பிறப்பு, தமிழக அரசியலில், புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக சட்டசபைக்கு,
காத்திருக்கும் கட்சிகள்: கூட்டணியை முடிவு செய்ய ரஜினி தயக்கம்

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கியுள்ள நிலையில், ரஜினியின் அறிவிப்பு, கூட்டணியை முடிவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி கட்சி துவக்கிய பின்னரே, மற்ற கட்சிகள், தங்கள் கூட்டணியை முடிவு செய்ய காத்திருக்கின்றன. எனவே, புத்தாண்டு பிறப்பு, தமிழக அரசியலில், புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



தமிழக சட்டசபைக்கு, வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே துவக்கத்தில், பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.எனவே, அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ளன.தி.மு.க., அணியை பொறுத்தவரை, 2019 லோக்சபா தேர்தல் கூட்டணி கட்சிகள், அப்படியே தொடர்கின்றன. அதேபோல, அ.தி.மு.க., கூட்டணியிலும், தற்போது வரை, பழைய கூட்டணி நீடிக்கிறது. ஆனால், இரு கூட்டணியிலும் உள்ள கட்சிகள், கூட்டணியை இன்னமும் இறுதி செய்யாமல் உள்ளன.



இதற்கு காரணம், நடிகர் ரஜினி.இவர், ஜனவரியில் அரசியல் கட்சியை துவக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவர் கட்சி துவக்கிய பின், அவருக்கு மக்கள் அளிக்கும் ஆதரவுக்கேற்ப, அவருடன் களம் இறங்க, பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ., கட்சி, திடீரென ரஜினியுடன் கைகோர்த்தால், அது சிக்கலை ஏற்படுத்தும். அ.தி.மு.க., வில், 'சீட்' கிடைக்காதவர்கள் மற்றும் அதிருப்தியில் உள்ளவர்கள், ரஜினி பக்கம் தாவுவர்.பா.ஜ.,வை பின்பற்றி பா.ம.க.,வும், அங்கு செல்ல வாய்ப்புள்ளது.அவ்வாறு சென்றால், அ.தி.மு.க., வேறு சில கட்சிகளை இணைத்து, கூட்டணியை பலப்படுத்த வேண்டியதிருக்கும்.



அதேபோல, தி.மு.க.,வில், 'சீட்' பங்கீட்டில், பிரச்னை ஏற்பட்டால், பாதிக்கப்படும் கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணிக்கோ, ரஜினி பக்கமோ வர வாய்ப்புள்ளது. நடிகர் கமல், ஏற்கனவே ரஜினியுடன் கைகோர்க்க தயார் என, அறிவித்துள்ளார். அ.ம.மு.க.,வும், ஏதேனும் கட்சிகள் வந்தால், கூட்டணி அமைக்க தயாராக உள்ளது.



ரஜினி வருகையை, அனைத்து கட்சிகளும் எதிர்பார்ப்பது போல, அ.ம.மு.க.,வினர், சசிகலா வருகையை எதிர்பார்க்கின்றனர். அவர் வருகை, அ.தி.மு.க.,வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.ஒவ்வொரு கட்சியும், யாருடன் சேர்ந்தால் லாபம் என, கணக்கிட்டு வருவதால், கூட்டணி முடிவாவதில் இழுபறி நீடிக்கிறது.



இதன் காரணமாக, ரஜினி கட்சி துவக்கிய பின், தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, புத்தாண்டில் புதிய மாற்றங்கள் நிகழும் என, எதிர்பார்க்கப்படுகிறது. -


நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

r.sundaram - tirunelveli,இந்தியா
20-டிச-202020:30:10 IST Report Abuse
r.sundaram பிஜேபிக்கு ஆதரவு தராமல், பிஜேபியுடன் கூட்டணி வைக்காமலோ, பிஜேபியை எதிர்த்தோ ரஜனி களம் கண்டார் என்றால் அது பிஜேபியின் ஓட்டுக்களை பிரிக்கும் செயலாக அமையும். அதை ரஜனி தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மாற்றம் வேண்டும் என்று நிலைப்பவர்களின் ஓட்டுக்கள் சிதறும். முடிவில் பலனை அடைவது திமுக/அதிமுக ஆக இருக்கும். ரஜனி இதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
20-டிச-202019:45:11 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நீங்கள் யாரை பற்றி பேசுகிறீர்கள் தெரியுமா என்ன முத்து / லிங்கா / அருணாச்சலம் / படங்களில் அவர் மொத்த சொத்தை தானம கொடுத்த பாபாவை பற்றி உஷாரா பேசுங்க
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-டிச-202022:16:24 IST Report Abuse
elakkumananஅரசு பணத்தை எடுத்து இலவசமா டிவி பெ ட்டி கொடுத்து, மாசாமாசம், குடும்பத்துக்கு நிரந்தர வருவாய்க்கு வழிபண்ணிய தமிழ் வாச்மன் ரொம்ப நல்லவரு....ரயில் வராத தண்டவாளத்தில் படுத்து பலமுறை உசுரை கொடுத்த 'கள்ள'குடி மகான் நல்லவரு.....ரெண்டு மணி நேரமே உண்ணாவிரதம் இருந்து இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்ட பிறவி நல்ல பிறவி ....இல்லையா நண்பா......................ஓசி வாங்க வரிசையில் நிற்கும் வாழ்க்கை கேவலமானது னு சொன்னவர் மோசமானவர்.....இல்லையா நண்பா................உங்க அளவுக்கு அறிவு , இங்கே யாருக்குமே இல்லை நண்பா..... ஒரு ராஜ்யசபா சீட்டு கொடுத்து மெரினாவில் இடம் பிடிக்கும் வாழ்க்கைமுறை உயர்ந்தது இல்லையா நண்பா... கேவலத்திலும் கேவலமான பிறவி க்கு முட்டு கொடுக்கும் உங்கள் மீது இரக்கப்படுவதை தவிர ஒன்றும் செய்ய இயலாது நண்பா..................காவேரியில் தண்ணி இல்லாமல் அல்லாடிக்கிட்டு இருந்தபொழுது, தொலைத்தொடர்பு துறையை அடிச்சி பிடிச்சு வாங்கி ரெண்டு ஜி சம்பாரிச்சவர் ரொம்ப பெரிய மகான் இல்லையா நண்பா.................... மக்களின் மறதியை முதலீடாக கொண்ட கேவல இயக்கம் நண்பா....புரியுதுங்களா .................
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
20-டிச-202018:08:40 IST Report Abuse
Loganathaiyyan நாட்டை கட்டிக்காப்பவன் முதலில் ஒரு ரோல் மாடெலாக இருக்கவேண்டும். தமிழனே சிந்திக்க ஆரம்பி இப்பொழுதாவது. முதலில் மது குடிப்பதை நிறுத்தும் பாதி முன்னேற்றம் உடனே வரும் சினிமாவை மாய லோக சினிமாவாக பார் அதை மற உடனே இன்னும் 25% முன்னேற்றம் நீ நீயாக சிந்திக்கத்தொடங்குவாய். எழுமின் விழிமின் புறப்படுமின் தமிழா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X