பாண்டி பஜார் : நகை பட்டறையில் இருந்து, 400 கிராம் தங்கத்துடன் தலைமறைவான ஊழியர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, தி.நகர், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் மகாவீர் ஜெயின், 53. இவர், அதே பகுதியில், தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பரான் சந்திரன், 30, என்பவர், ஓராண்டாக பணி புரிந்து வந்தார்.நேற்று முன்தினம், மகாவீர் ஜெயின், 400 கிராம் தங்கத்தை, நகைகள் செய்வதற்காக, பரான் சந்திரனிடம் கொடுத்தார். அவர், தங்கத்துடன் தலைமறைவாகி விட்டார். மொபைல் போனும், அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பாண்டி பஜார் காவல் நிலையத்தில், மகாவீர் ஜெயின் புகார் அளித்தார். போலீசார், கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தலைமறைவாக உள்ள பரான் சந்திரனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE