ஓசூர்:கொத்தமல்லி வியாபாரி, மர்ம கும்பலால் ஓட, ஓட விரட்டி குத்திக் கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தொட்டூரைச் சேர்ந்தவர் ராஜப்பா, 55, விவசாயி; கொத்தமல்லி வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, சூளகிரிக்கு, ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் ராஜப்பா சென்றார். அப்போது, பைக்கை வழி மறித்த மர்ம கும்பல் அவரை, ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பியது.
சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் ராஜப்பாவுக்கும், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே நிலப்பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பினரும் அளித்த புகார்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராஜப்பா கொலை செய்யப்பட்டுள்ளார்.அவரது கொலைக்கு நிலப்பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில், போலீசார்,விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE