மதுக்கரை:மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்த செய்தி, நேற்று முன் தினம் நமது நாளிதழில் வெளியானது.இதையடுத்து, மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் அறிவுறுத்தலில் போலீசார் பஸ் ஸ்டாப், மேம்பால பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.மதுக்கரை மார்க்கெட் பஸ் ஸ்டாப் பகுதியில் நின்றிருந்த வாலிபர் ஒருவரிடம் விசாரித்தனர். கணபதி, நல்லாம்பாளையம், சுந்தரம் வீதியை சேர்ந்த பாலசுப்ரமணியம், 26 எனவும், பல் கிளினிக் ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், 200 கிராம் கஞ்சா சிக்கியது. கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE