குறிஞ்சிப்பாடி; மகளிர் திட்டம் சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடந்தது.கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, உதவி திட்ட அலுவலர் விஜயகுமார், ரமேஷ்பாபு, ராஜ்குமார், கார்த்திகேயன் பங்கேற்றனர். வட்டார இயக்க மேலாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE