அன்னூர்:அன்னூர் அருகே சரக்கு வாகனம் மோதி, தொழிலாளி இறந்தார்.அச்சம்பாளையம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பத்ரன், 49. சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, மொபட்டில் கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். மைல்கல் அருகே செல்லும்போது, அதே வழியில் வந்த, சரக்கு வாகனம், மொபட் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது.இதில் படுகாயமடைந்த பத்ரன், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE