காரைக்கால்:புதுச்சேரி மாநில, முன்னாள் எம்.எல்.ஏ., மனைவி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் கணபதி, 63; அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., இவர் மனைவி அருமைக்கண்ணு, 60. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவர், மனைவி கருத்து வேறுபாட்டால், தனித்தனியாக வசித்து வருகின்றனர்.இருப்பினும், இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதில் விரக்தியடைந்த அருமைக்கண்ணு, வீட்டை விட்டு வெளியில் சென்றவர் திரும்பவில்லை. கணபதி, திருபட்டினம் போலீசார் உதவியுடன் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், அருமைக்கண்ணு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. நேற்று காலை, ஆற்றில் உள்ள முட்புதரில் சிக்கியிருந்த உடலை மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE