காசிமேடு : கஞ்சா விற்ற, கோழி குப்பன் என்பவரை கைது செய்த போலீசார், 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசாருக்கு, நாகூரார் தோட்டம் படகு கட்டும் இடத்தில், சட்டவிரோதமாக, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் கண்காணித்த போலீசார், கஞ்சா விற்றுக் கொண்டிருந்த, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கோழி குப்பன், 52, என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து, 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE