திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே மயங்கி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் கிராமம், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ராமு மகன் முருகன், 34; திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க வெளியில் சென்று வீடு திரும்பியவர், வீட்டு வாசலில் மயங்கி கீழே விழுந்தார்.உடன், திருக்கோவிலுார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE