புதுச்சேரி; போக்குவரத்துக்கு இடையூறாக நின்றதை கண்டித்த தொழிலதிபரின் காரை 10 கி.மீ., துாரம் விரட்டி சென்று கண்ணாடியை .டைத்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, தர்மாபுரி லெனின் வீதியை சேர்ந்தவர் பிரவீன்குமார, 48; தொழிலதிபர். இவர் கடந்த 13ம் தேதி சென்னையில் இருந்து காரில் இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தார்.காலாப்பட்டு அருகே வந்தபோது போக்குவரத்து இடையூறாக நின்றிருந்த வாலிபர்களை கண்டித்துவிட்டு, வந்தார்.அதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், 10 கி.மீ., துாரத்திற்கு காரை பின் தொடர்ந்து வந்து, லாஸ்பேட்டை சாராயக்கடை அருகே காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி சென்றனர்.இது குறித்து பிரவீன்குமார் கொடுத்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீ சார் வழக்குப் பதிந்து, அடை யாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE