மேட்டுப்பாளையம்:அரசு விழாவுக்கு, கொடிக்கம்பம் நட்ட வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ராமம்பாளையத்தில், 'அம்மா மினி கிளினிக்' துவக்கப்பட இருந்தது. அமைச்சர் வேலுமணி மினி கிளினிக்கை திறந்து வைக்க இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை, அரசு அதிகாரிகளும், அ.தி.மு.க., நிர்வாகிகளும் செய்தனர். சாலையின் இரு பக்கமும் கட்சிக் கொடிகள், பிளக்ஸ் பேனர் வைக்கும் பணி நடந்தது.
தாசம்பாளையத்தைச் சேர்ந்த பூவரசன், 20 என்பவர், கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டார். அப்போது, தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின் கம்பியில், இரும்பு பைப் மோதியது. இதில் மின்சாரம் தாக்கி பூவரசன் இறந்தார். இதனால் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE