கோவை:கோவை, அண்ணா நகரில், போலீஸ் பாதுகாப்புடன், நேற்று போர்வெல் போடப்பட்டது; 620 அடியில், தண்ணீர் வந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கோவை மாநகராட்சி, 14வது வார்டு, வேலாண்டிபாளையம், அண்ணா நகரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சி அதிகாரிகள், போர்வெல் போட நேற்று முன்தினம் மதியம் முயன்றனர்.விளையாட்டு மைதான பகுதியில், போர்வெல் போடக்கூடாதென, பொதுமக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'நீரோட்டம் உள்ள பகுதியில்தான் போர்வெல் போட முடியும்' என அதிகாரிகள் தரப்பில் கூறியபோதும், எதிர்ப்பு தெரிவித்தால், அப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது.நேற்று, அதே இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் போர்வெல் போடப்பட்டது; 620 அடியில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது. தண்ணீர் கொப்பளித்து வருவதை பார்த்து, மக்கள் குதுாகலித்தனர்.அருகாமையில் உள்ள போர்வெல்லுடன் இணைப்பு ஏற்படுத்தி, 1,500 குடும்பத்தினருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE