ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், உபகரணங்கள்வழங்க மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் தலைமை வகித்தார். எலும்புமுறிவு மருத்துவர் மதிவாணன், மனநல மருத்துவர் பெரியார் லெனின், முடக்கியல் வல்லுனர் ஜெய்சங்கர் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்தனர்.50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பல இடங்களில் நடந்த முகாமில் டிச., 20 வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுஉள்ளனர். இவர்களில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல், செயற்கை கால்கள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE