பொங்கலுார்:கந்தாம்பாளையத்தில் விவசாயி கண்முன்னே மர்ம நபர்கள் ஆட்டை திருடி கொண்டு காரில் தப்பினர்.பொங்கலுார் அருகே வட்டமலைபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 55; விவசாயி. இவரது வீட்டருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். காலையில் பார்த்த போது, ஐந்து ஆடுகளை காணவில்லை.இதேபோல, பெரியாரிபட்டி, கரட்டுப்பாளையம் உட்பட பல இடத்தில் ஆடுகள் திருட்டு தொடர் கதையாகி வருகிறது. அவ்வகையில், கந்தாம்பாளையத்தை சேர்ந்த பாட்டப்பன், 70, என்பவர் தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். காரில் வந்த மர்ம நபர்கள் ஆட்டை திருடி கொண்டு காரில் தப்பி விட்டனர்.இதுபோல் அடிக்கடி தொடர் திருட்டு நடப்பதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். போலீசார் விசாரித்து, ஆடு திருடர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE