திருப்பூர்:கொரோனா பாதுகாப்பு விதிமுறை பின்பற்றி, மாதாந்திர குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாநில அரசு உத்தரவுபடி, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், பிரதிமாதம் நான்காவது வெள்ளியன்று, கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படும். கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், அதன் முந்தைய புதன் கிழமையில் நடத்தப்படும். கொரோனா பாதிப்பால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.இதனால், விவசாயிகளின் குறை, சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 'ஆன்லைன்' மூலம், குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் அலுவலகத்திற்கு சென்று, காணொலி காட்சி வாயிலாக, கலெக்டரிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.விவசாயிகள் கூறியதாவது;ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கருத்துகேட்பில் திருப்தியில்லை. அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்துகின்றனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகள், கூட்டம் நடத்துகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டமும் நடத்தப்படுகிறது. அதேபோன்று, சமூக இடைவெளி பின்பற்றி, முக கவசம் அணிந்து, மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.ஒட்டு மொத்த விவசாயிகளை பங்கேற்க செய்வதை தவிர்த்து, விவசாய சங்க பிரதிநிதிகளை மட்டும் அழைத்து, குறைகேட்பு நடத்தலாம். இதற்கிடையில், நடப்பு மாதத்திற்கான குறைகேட்பு கூட்டம், காணொலி காட்சி வாயிலாக, வரும், 23ம் தேதி, காலை, 10:30 மணிக்கு நடக்கும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE