ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீதித்துறை, காவல்துறை ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், மாவட்ட எஸ்.பி., கார்த்திக் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், அவற்றை விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகள், வழக்குகளை நடத்தும் போது ஆவணங்களை கையாளுதல் உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.நீதிபதிகள் மகிளா விரைவு நீதிமன்றம் சுபத்ரா, சார்பு நீதிபதி மன்றம் பிரீத்தா மற்றும் கூடுதல் எஸ்.பி., அர்விந்த், ஏ.டி.எஸ்.பி., லயோலா இக்னேஷியஸ், ஜெய்சிங் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE