கோவை:புகையிலை, மது விற்பனையில் ஈடுபட்ட எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.கோவை கடைவீதி, வெரைட்டிஹால் ரோடு, சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் போலீசார் புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 64 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு பேரை கைது செய்தனர்.இதேபோல், கோவை ஆர்.எஸ்.புரம், கணபதி, சங்கனுார், காந்திபுரம், ரத்தினபுரி, ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE