திருப்பூர்:சர்வதேச சிறுபான்மையினர் உரிமை தினம் முன்னிட்டு திருப்பூரில், நலக்குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.புதிய கல்வி திட்டம் திரும்ப பெற வேண்டும்; சிறுபான்மையினத்தவர் மீதான தாக்குதல் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முகமது ஜாபர் தலைமை வகித்தார்.நகர பொருளாளர் இப்ராகிம்ஷா, கலீல் ரகுமான், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.கோரிக்கைகளை வலியுறுத்தி, பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர். அன்பு நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE