திருப்பூர்:'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிரம்மாண்ட கலையரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். போதிய இடவசதி இருந்தும், கூட்டம், விழா, கலை நிகழ்ச்சி நடத்த கலையரங்கம் இல்லை என்ற குறை இருந்தது.இதையடுத்து, 'நமக்கு நாமே' திட்டத்தில், 1.20 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்ட பல்நோக்கு கலையரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி கூறியதாவது:சுய சார்பு அடிப்படையில், பொதுமக்கள் பங்களிப்புடன், பொது சொத்து உருவாக்கி, பராமரித்து கொள்ளலாம் என்ற 'நமக்கு நாமே' திட்டத்தின் அடிப்படையில், கலையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. பள்ளி பி.டி.ஏ., சார்பில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன், 40 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்; எஞ்சிய தொகையை அரசு வழங்கியது. பள்ளி திறப்பதற்குள் பணி நிறைவு பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE