திருப்பூர்:வெள்ளகோவில் பகுதி, பி.ஏ.பி., பாசன சீரமைப்பு தொடர்பாக, விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.ஆர்.டி.ஓ., ஜெகநாதன் கூறியதாவது:வெள்ளகோவில் பி.ஏ.பி., பாசன நீர் பங்கீடு தொடர்பான, அமைதி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள், பொதுப்பணித்துறை பதிவேடுகள் விவரங்களை கேட்டுள்ளனர். விரைவில், பெற்று வழங்குவதாக தெரிவித்துள்ளோம். விவசாயிகள் தரப்பு, தங்களது கோரிக்கை முன்வைத்துள்ளனர். கலெக்டருடன் ஆலோசித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE