ராமேஸ்வரம்:இலங்கை எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீன்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டிச.,12ல் ராமேஸ்வரம் விசைப்படகுகள், இலங்கை நெடுந்தீவு அருகில் மீன்பிடித்தன. ஒருபடகின் வலையில் பெரிய திருக்கை உள்ளிட்ட சில மீன்கள் சிக்கின.இதை இலங்கை மீனவர்கள் வீடியோ எடுத்து, எங்கள் பகுதி மீன்வளத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் சுரண்டுகின்றனர், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது' என கூறி தமிழக பத்திரிகைகள், ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகளுக்கு வீடியோவை அனுப்பினர்.
இந்த வீடியோ வைரலாகியும் மீன்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால் டிச.,14 ல் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை இலங்கை கைது செய்தது.இந்நிலையில் வீடியோவில் பதிவாகிய விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநரிடம் மீனவர்கள் புகார் அளித்தனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் கூறியது: இந்த விசைப் படகினால், தற்போது 29 மீனவர்கள், 4 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளன. அரசுகளுக்கு அவபெயரை ஏற்படுத்தி, இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்ட அப்படகு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE