பாலக்காடு:வாளையாரில் இரு லாரிகள் மோதி, டிரைவர்கள் இருவர் இறந்தனர்.கேரள மாநிலம், கொடுங்கல்லுாரை சேர்ந்தவர் ராஜேஷ் 40; லாரி டிரைவரான இவர், அதிகாலை 2.30 மணியளவில் வாளையார் எக்சைஸ் சோதனைச்சாவடி எதிரே லாரியை நிறுத்தி ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி அதிவேகமாக வந்த, ஒரு லாரி மோதியது. லாரியை குழந்தைவேல் 43, என்பவர் ஓட்டி வந்தார். இதில் இரு டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வாளையார் போலீசார் உடல்களை மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE