கோவை:கோவையில், நேற்று ஒரே நாளில் 124 பேர் கொரோனா குணமாகி வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று தெரியவந்துள்ளது. மொத்த பாதிப்பு, 51 ஆயிரத்து 147 ஆக உயர்ந்தது. நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. மொத்த பலி எண்ணிக்கை, 634 ஆக உள்ளது.அரசு மருத்துவமனை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 124 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 49 ஆயிரத்து 453 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1,060 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE