வேடசந்துார் : புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சிபிஎஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் அனைத்துகட்சி தலைவர்களிடம் நேரடியாக சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழகத்தில் 2003 முதல் புதிதாக பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு,பழைய திட்டத்தை செயல்படுத்த சி.பி.எஸ்., செயல்படுகிறது.இதற்காக, இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரடெரிக் ஏங்கல்ஸ், செல்வக்குமார்உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னையில் முதல்வர், துணைமுதல்வர்களின் தனி உதவியாளர்கள், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், காங்.,பொறியாளர் அணி மாநில தலைவர் மனோஜ், மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர்சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்ய பொது செயலாளர் மவுரியா உள்ளிட்டோரிடம்மனு அளித்து வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE