திருப்பூர்:திருப்பூர், பாண்டியன் நகர் பகுதியில், குழாய் பதிக்க தோண்டிய குழி மூடப்படாததால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், வளர்ச்சி பணி நடந்து வருகின்றன. 4வது குடிநீர் திட்டத்தில், குழாய் பதிக்கும் பணி, மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், பாண்டியன் நகர் சுற்றுப்பகுதியில் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் முதல் பூண்டி செல்லும் வகையில், காமாட்சியம்மன் கோவில், ஹரிகரன் நகர், ராஜிவ் வீதி வழியாக உள்ள ரோட்டில் குழி தோண்டி குழாய் பதிக்கப்பட்டன.குழாய் பதிப்பு பணி முடிந்து, 10 நாட்களுக்கு மேலாகியும், குழி சரிவர மூடப்படாததால், குழி தோண்டிய இடத்தில், மண்ணை மட்டும் கொட்டி சென்றுள்ளனர். ரோடு முழுதும் மேடுபள்ளமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE