சென்னை:'கோவில்பட்டியில், ரயில்கள் நின்று செல்ல வேண்டும்' என, தெற்கு ரயில்வேக்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வழியாக தினமும், 27 பயணியர் ரயில்கள், இரு வழியிலும் ஓடுவது உண்டு. இப்போது, பாதி ரயில்கள் தான் ஓடுகின்றன. அதிலும், நாகர்கோவில் - சென்னை ரயில்; மதுரையில் இருந்து தினமும் இரவு, 11:00 மணிக்கு புறப்படும், புனலுார் விரைவு ரயில்; நாகர்கோவில் - கோவை விரைவு ரயில்; சென்னை - கன்னியாகுமரி, அதிவிரைவு ரயில் ஆகியவை, கோவில்பட்டியில் நிற்பதில்லை.
அதேபோல, புதன், வெள்ளி மட்டும் இயக்கப்படும், கன்னியாகுமரி - டில்லி நிஜாமுதீன் விரைவு ரயில்; வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும், நாகர்கோவில் - சென்னை ரயில் போன்றவையும் நிற்பதில்லை.இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, அனைத்து ரயில்களும், முன்னர் போல, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல், பயணியர் ரயில்களையும் இயக்க வேண்டும். சிறப்பு ரயில் என இயக்காமல், வழக்கமான பெயர்களிலே இயக்க வேண்டும்.இவ்வாறு, வைகோ கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE