திருப்பூர்:தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில், மாநில அரசு தடை செய்த, புகையிலை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.அவ்வகையில், துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டது. தனிப்படையினர், காங்கயம் ரோடு வி.ஜி.வி., கார்டன் பகுதி மற்றும் கே.எஸ்.சி., பள்ளி வீதி ஆகிய இடங்களில் சோதனை செய்தனர். அதில், வி.ஜி.வி., கார்டன் பகுதியிலுள்ள 269 கிலோ எடையுள்ள 'பான் மசாலா' பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நெல்லை மாங்குளத்தை சேர்ந்த ஜெபசிங் பிலிப், 40 என்பவரை கைது செய்தனர்.இதபோல, கே.எஸ்.சி., பள்ளி வீதியில் தினகரன், 42, என்பவர் மளிகை கடையில் 31 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இரு இடத்திலும், மொத்தம், 300 கிலோ எடையுள்ள, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE