ஊட்டி:நாகாலாந்து நாட்டின் பழங்குடியினரின் வாழ்க்கை முறை குறித்த புகைப்பட கண்காட்சி, ஊட்டியில் துவங்கியது.நீலகிரி மாவட்டம், ஊட்டி சேரிங்கிராஸ் நகராட்சி கலைக்கூடத்தில், தஞ்சாவூரை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மணிவண்ணன், நாகாலாந்து மாநிலத்தில் எடுத்த பழங்குடியின மக்களின் புகைப்பட கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்தார்.இந்த கண்காட்சி மற்றும் நுாலகத்தை, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ துவக்கி வைத்தார். இதில், நாகாலாந்து பழங்குடியினர், தங்களது பாரம்பரிய உடையில் இருக்கும் பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 20 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE