ஊட்டி:குந்தா அணையில் இருந்து மின் உற்பத்திக்கான தண்ணீர் செல்லும் ராட்சத குழாய்களில், சகதி அடைத்துள்ளதால், தினமும் 170 மெகாவாட் மின் உற்பத்தி தடைபடுகிறது. நீலகிரியில், 13 மின் நிலையங்கள் மூலம் தினசரி, 750 மெகாவாட் நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்காக, தண்ணீர் தேக்கி வைக்கப்படும் அணைகள், பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ளன.குந்தா அணையில் சேமிக்கப்படும் தண்ணீரை நம்பி, கெத்தை, பரளி, பில்லூர் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அணையில் இருந்து, கெத்தை மின் நிலையத்துக்கு தண்ணீர் செல்லும் ராட்சத குழாய்களில் சகதி அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் தண்ணீர் அளவு குறைந்து, நாள்தோறும், 170 மெகாவாட் மின் உற்பத்தி தடைபடுகிறது. ஒரு வாரமாக, இந்த பாதிப்பு தொடர்கிறது.'சகதியை அகற்றினால் மட்டுமே, முழு அளவில் தண்ணீர் சேகரிக்கவும், முழு திறனுக்கு மின் உற்பத்தி செய்யவும் முடியும்' என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE