கொடைக்கானல்:
நானுாறு ஆண்டுகளுக்கு பின் நாளை சனி, வியாழன் கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய வானியல் நிகழ்வை காண, கொடைக்கானல் வான் இயற்பியல் மையத்தில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இதற்கு முன், 1623ம் ஆண்டில் நிகழ்ந்தது.இதுபற்றி கொடைக்கானல் வான் இயற்பியல் மைய விஞ்ஞானி எபினேசர் கூறியதாவது;
இந்நிகழ்வை மேற்கு திசையில் வெறும் கண்களால் காணலாம். நாளை மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை தொலை நோக்கி வாயிலாக காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பகலில், 20 ரூபாய், இரவில், 50 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிகழ்வால் சீதோஷ்ண நிலை மாற்றம் அல்லது பூமி சார்ந்த எவ்வித பாதிப்புகளுக்கும் வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE