பந்தலுார்:பந்தலுார் அருகே மூவரை கொன்ற யானையை பிடிக்க, தமிழக - கேரளா வனத்துறையினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் மூன்று பேரை தாக்கி கொன்ற, ஒற்றை கொம்பன் யானையை பிடிக்கும் பணி, ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் யானை, கேரள வனப்பகுதிக்குள் சென்றதால், தமிழக - கேரள வனத்துறையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நிலம்பூர் அருகே, இருட்டுகுத்தி ஆதிவாசி காலனி பகுதியில், யானை நின்றிருப்பதை வனத்துறையினர் நேற்று உறுதி செய்துள்ளனர்.
கூடலுார் வன அலுவலர் சுமேஷ்சோமன் கூறுகையில்,''யானை கேரள வனத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலம்பூர் வடக்கு கோட்ட வன அலுவலருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்பின், யானையை அங்கு பிடித்து கொண்டு வர முடியுமா அல்லது நம் வனப்பகுதிக்குள் விரட்டிய பின் பிடிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE