பாலக்காடு:பாலக்காடு அருகே, காட்டில் விறகு சேகரிக்க சென்றவர் மரம் விழுந்து பலியானார்.
பாலக்காடு மாவட்டம், அயிலுார் கல்சாடி பழங்குடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சேகரன் 31. இவரது மனைவி ரஜிதா 21. நேற்று முன்தினம், நெல்லியாம்பதி கோழிமுட்டம் வனத்தில் விறகு சேகரிக்க சென்றனர். அப்போது, மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.படுகாயமடைந்த இருவரையும் பழங்குடியினர் சிலர், டோலி கட்டி 5 கி.மீ., நடந்து குடியிருப்பு பகுதிக்கு கொண்டு வந்தனர். நெம்மாரா போலீசார், வாகனத்தில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் சேகரன் பலியானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE