மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே நடக்க இருந்த, அரசு விழாவுக்கு, கொடிக்கம்பம் நட்ட வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சி, ராமம்பாளையத்தில், 'அம்மா மினி கிளினிக்' துவக்கப்பட இருந்தது. அமைச்சர் வேலுமணி மினி கிளினிக்கை திறந்து வைக்க இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை, அரசு அதிகாரிகளும், அ.தி.மு.க., நிர்வாகிகளும் செய்தனர்.சாலையின் இரு பக்கமும் கட்சிக் கொடிகள், பிளக்ஸ் பேனர் வைக்கும் பணிகளில், வேலையாட்கள் ஈடுபட்டனர்.
தாசம்பாளையத்தை சேர்ந்த பூவரசன், 20 என்பவர், கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின் கம்பியில், இரும்பு பைப் மோதியது.இதில் மின்சாரம் தாக்கி பூவரசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறுமுகை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து நடந்த பகுதியை கோவை வடக்கு ஆர்.டி.ஒ., சுரேஷ் ஆய்வு செய்தார். ராமம்பாளையத்தில் நடக்க இருந்த, அம்மா மினி கிளினிக் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE