கோபி: கோபியில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோபி, தமிழ்நகரை சேர்ந்த, 63 வயது ஆண் மற்றும், 58 வயது பெண்ணுக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும், அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். தொற்று தலை தூக்கிய முதல், கோபியில் நேற்று வரை, மொத்தம், 321 பேர் கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்களில், நான்கு பேர் இறந்தும், 308 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சிய ஒன்பது பேர், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE