ஈரோடு: ஈரோடு, ஈ.வி.என்., சாலை, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், பகிர்மானம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும், தனியாருக்கு ஒப்பந்தம் விடும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். இதன் மூலம், மின்வாரிய கட்டமைப்பும், பொதுமக்களுக்கான சேவையும் பாதிக்கப்படும். காலியாக உள்ள அனைத்து பணிகளுக்கும், நிரந்தர பணியாளர்களை நியமித்து, அவர்கள் மூலம், பணிகளை மேற்கொள்ள வேண்டும். மின்வாரிய பணிகளை தனியாருக்கு வழங்கும் போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE