ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவ,மாணவியருக்கு வழங்க, 13 ஆயிரத்து 112 இலவச சைக்கிள்கள் தயாராக உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டு தோறும் இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்தாண்டு, இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், மாணவ,மாணவியருக்கு வழங்குவதற்காக வந்த உதிரி பாகங்கள் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக, சைக்கிளாக உருமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் ஏற்கனவே துவக்கி வைத்துள்ளார். பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனும் விரைவில் ஈரோடு மாவட்டத்தில் இலவச சைக்கிள்களை வழங்க உள்ளார். பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 5,693 மாணவர்கள், 7,419 மாணவிகள் என மொத்தம், 13 ஆயிரத்து, 112 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE