ஈரோடு: கொடுமுடி அடுத்த சாலை புதூரில், கீழ் பவானி முறைநீர் பாசன சபை பொதுக்குழு கூட்டம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்துவதற்காக, நிதி ஒதுக்கீடு செய்த அரசுக்கு நன்றி தெரிவிப்பது. கீழ்பவானி திட்ட கால்வாயை முழுமையாக, லைனிங் செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் முறை பாசனத்துக்கு தண்ணீர் விடும் தேதியை, முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றினர். கூட்டத்துக்கு பாசன சபை தலைவர் முத்துசாமி, பொருளாளர் மணி முன்னிலை வகித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE