ஈரோடு: தமிழக அரசு, சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற, 20 வரை (இன்று) கால அவகாசம் அளித்து இருந்தது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் நேற்று காலை, 11.20 மணி நிலவரப்படி சர்க்கரை கார்டுக்ளை அரிசி கார்டுகளாக மாற்ற கோரி, 12 ஆயிரத்து, 559 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 12 ஆயிரத்து, 362 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. 12 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 185 நிலுவையில் உள்ளன. ஈரோடு தாலுகாவில் கார்டு மாற்ற கோரி, 5,935 விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 5,842 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE