கெங்கவல்லி: நெற்பயிர் நடவு செய்த, 18 நாளில் கதிர் வந்ததால், விவசாயி, வேளாண்துறையில் புகார் அளித்தார். பெத்தநாயக்கன்பாளையம், தென்னம்பிள்ளையூரை சேர்ந்த, விவசாயி செல்வக்குமார், 40. இவர், கடந்த நவ., 30ல், தம்மம்பட்டியில் உள்ள தனியார் நர்சரியில் நெல் நாற்று வாங்கி, அவரது நிலத்தில் நடவு செய்துள்ளார். ஆனால், முழுமையாக வளராத நிலையில், 18வது நாளில், நெற்கதிர் வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த செல்வக்குமார், கெங்கவல்லி வேளாண் அலுவலகத்தில், உதவி இயக்குனர் சித்ராவிடம் புகார் அளித்தார். இதுகுறித்து, உதவி இயக்குனர் சித்ரா கூறுகையில், ''ஏ.டி.டி., ரக நெல் நாற்று, 22 முதல், 30 நாளில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த, 30ம் நாளில் கதிர் பிடிக்கும். தனியார் நர்சரியில் வாங்கிய நாற்று, 18ம் நாளில் கதிர் வந்துள்ளது குறித்து விசாரித்தபோது, 40 நாள் முதிர்ச்சி பெற்ற நாற்று என்பதால், கதிர் வந்துள்ளது. அந்த விவசாயிக்கு, நர்சரி மூலம் இழப்பீடு வழங்குவதாக கூறியுள்ளனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE