சேலம்: தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனோ காலத்தில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்கள் எல்லாம், இதுவரை இல்லாத, வருமான இழப்பை சந்தித்துள்ளனர். இதை பொருட்படுத்தாமல், கடந்த மே மாதம் முதல், ஐந்து முறை, சமையல் காஸ் சிலிண்டர் விலையை ஏற்றியுள்ள, மத்திய பா.ஜ., அரசு, தற்போது, 15 நாள் இடைவெளியில், 50 ரூபாய் என இருமுறை உயர்த்தி, காஸ் சிலிண்டர் விலையை, 710 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து, இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் எதிரே, டிச., 21(நாளை) மாலை, 3:00 மணிக்கு, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில், ஒன்றிய, நகர, பேரூர் மகளிர் அணி நிர்வாகிகள், தாய்மார்கள், இல்லத்தரசிகள் என, அனைத்து தரப்பு மகளிரையும் திரட்டி, ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE