தர்மபுரி: தர்மபுரியில், பத்து ரூபாய் இயக்கம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். பென்னாகரம் பகுதி பொறுப்பாளர் பிலிப், பத்து ரூபாய் இயக்கத்தின் செயல்பாடுகள், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பேசினார். கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக, அரசு அலுவலகங்களை நாடும் போது, லஞ்சம் கொடுக்காமல் பெறும் வழிமுறைகள் பற்றியும், கொடுத்த தனிக்கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கைகளை, அரசு அலுவலங்கள் குறிப்பிட்ட கால நேரத்தில் நிறைவேற்றவில்லை என்றால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறியவும் எடுத்து கூறுப்பட்டது. அரசு அலுவலகங்களை நாடும்போது, மக்கள், தங்களது கோரிக்கையை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பாகவும், சட்ட விழிப்புணர்வு குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE