தர்மபுரி: புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தும் போது, புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரியில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க, மாவட்ட பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் ருத்தரையன் தலைமையில் நடந்தது. பேரவையின் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் பேசினார். கூட்டத்தில், ஜல்ஜீவன், இளைஞர் வேலைவாய்ப்பு திட்டம் போன்ற இந்த புதிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, திட்டங்கள் துவங்கும் போதே, புதிய ஊழியர்களையும் நியமிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அவர்கள் இருப்பிடத்துக்கு அருகிலேயே விருப்ப மாறுதல் ஆணைகளை வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு, 50 சதவீத முன்னுரிமை வழங்கி, பணி பார்வையாவையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட, 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க புதிய நிர்வாகிகளாக, மாவட்ட தலைவராக சதீஷ்குமார், செயலாளராக சங்கர், பொருளாளராக சர்வோத்தமன், மாநில நிர்வாக உறுப்பினராக இளங்குமரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE