நல்லம்பள்ளி: லளிகத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், பால் உற்பத்தி கூட்டுறவு சங்க கட்டத்தை, அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்தார். நல்லம்பள்ளி, லளிகத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், பால் உற்பத்தி கூட்டுறவு சங்க கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா, கலெக்டர் கார்த்திகா தலைமையில் நடந்தது. புதிய கட்டடத்தை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்து பேசினார். இதையடுத்து, கிருஷ்ணாபுரம், ஜருகு ஆகிய பகுதிகளில், குடும்ப நலத்துறை சார்பில், மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் வெற்றிவேல், ஆவின் சேர்மன் அன்பழகன், தாசில்தார்கள் ரமேஷ், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE