கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., பகுதிகளில், 3 கோடியே, 63 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டம் மூலம், 2018 -19ம் நிதியாண்டில், 5வது வார்டுக்கு உட்பட்ட அப்பாசாமி தெருவில், 49 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய், தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. அதேபோல், கரகூரில் உள்ள பூங்காவில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 69 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் மதிப்பில், குப்பைகளை தரம் பிரிக்கும் கட்டுமான பணிகள் மற்றும் 2 கோடியே, 44 லட்சத்து, 21 ஆயிரம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் அகற்றம் செய்யும் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க, டவுன் பஞ்., அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, டவுன் பஞ்., உதவி இயக்குனர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., செயல் அலுவலர் பொன்னுசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE