வேலூர்: காட்பாடி அருகே, மூதாட்டியை கீழே தள்ளி செயின் பறித்து சென்ற கொள்ளையர்களை, போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடி பாலாஜி நகரை சேர்ந்தவர், நாகராஜ், 70. இவரது மனைவி ராணி, 60. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மளிகை பொருட்கள் வாங்க, அப்பகுதியிலுள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த இருவர், ராணியை கீழே தள்ளி, அவர் அணிந்திருந்த, 10 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். காட்பாடி போலீசார், செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE