அரியலூர்: ''வரும் சட்டசபை தேர்தலில், ஆறு சீட்டுக்கு மேல் எதிர்பார்த்துள்ளோம்,'' என இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சமுத்து தெரிவித்தார். ஐ.ஜே.கே., கொடியேற்று விழா அரியலூரில் நடந்தது. தலைவர் பச்சமுத்து அளித்த பேட்டி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிரானவை. இந்த சட்டத்தை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தி.மு.க., தலைமையில் நடக்கும் அனைத்து போராட்டங்களிலும், ஐ.ஜே.கே., கலந்து கொள்ளும். கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்றுள்ளதால், வரும் சட்டசபை தேர்தலில், ஆறு தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE