பள்ளிபாளையம்: பெருமாள்மலைப்பகுதியில், 20.91 லட்சம் ரூபாயில், புதிய சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம், அக்ரஹாரம் ஊராட்சியில், பெருமாள் மலை பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, பெருமாள்மலை முதல் ஓடக்காடு வரை, 14ம் நிதிக்குழு மானிய திட்டத்தில், 20.91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை, பஞ்., தலைவர் வசந்தி துவக்கி வைத்தார். பஞ்., முன்னாள் தலைவர் வெங்கடாசலம், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE