பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியம், நகராட்சி பகுதியில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகள், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிபாளையம் ஒன்றியம், நகரம் மற்றும் ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதிகளில், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர். மேலும் தொடர் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதனால், அதன் பயன்பாடு குறைந்தது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து அதிகாரிகளும், கொரோனா தடுப்பு மற்றும் சுகாதார பணியில் கவனம் செலுத்தி வருவதால், பிளாஸ்டிக் கவர் பயன்பாடு குறித்து ஆய்வு செய்வதில்லை; நடவடிக்கையும் இல்லை. இதனால், பெரும்பாலான கடைகள், பேக்கரி, வர்த்தக நிறுவனங்களில், பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே, அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE