மோகனூர்: மோகனூர் அடுத்த ஆண்டாபுரம் வாணியர் தெருவை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வடிவேல், 36. அவரது மகன் கீர்த்தீவாசன், 7, இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, 3:30 மணிக்கு, கீர்த்திவாசன், சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஆண்டாபுரத்தில் இருந்து மோகனூர் நோக்கி சென்ற டிராக்டர், கீர்த்திவாசன் மீது மோதியது. இந்த விபத்தில், படுகாயமடைந்த சிறுவனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் சிறுவன் இறந்துவிட்டது தெரிந்தது. மோகனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE