எலச்சிபாளையம்: தச்சன்காடு பகுதியில், சாலையில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்பிலி பஞ்., தச்சன்காடு அருந்ததியர்தெருவில், 70க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில், இதுவரை, வடிகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் குளம் போல் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் பீதியில் மக்கள் உள்ளனர். கிராம மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, வடிகால் வசதி ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE